வாழ்வின் மறு கரை
ஊர் தெப்ப குளத்தில் கார்த்திகை கொண்ட்டாட்டம்
நல்லான் சுள்ளான் எல்லாம் நீரில் நீந்தி கொண்டிருக்க
ஒரு தைரிய கீற்று
மெதுவாக படிகளில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் ஆட்டம்
என்னையும் அறியாமல் எழாம் உலக கை ஒன்று
உந்தி தள்ள
மௌனமாய் எவ்வித எதிர்ப்பும் இன்றி
நீரின் உணவுக் குழாய்களில்
வழுக்கி கொண்டு
காற்றுப் பைகளில் நீர் குமிழிகள்
பொங்கல் வைக்க
கைகள் பிடிபிற்காக ஏங்க!!!!!!
ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் தொலைந்த உணர்வு
இருளின் முடிவில் சூன்யம்
தலையில் திடீரென்று மின்சாரம் பாய்ச்சப்பட்டது
இரு கைகளில் ஏன் முடி கற்றைகள்.........
அந்த சில நொடிகள் பிற்காலத்தில்
என்னை நிறைய யோசிக்க வைத்தன
எனது தேடல்களின் முடிவுகள்
ஒரு தொடர் கதை
சில சமயம் பதில்கள்
நானாய்..................

